Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலையை தீவிரமாக தேடும் போலீஸார்: சென்னையில் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 7 பிப்ரவரி 2019 (09:41 IST)
சென்னை பெருங்குடியில் கைப்பற்றப்பட்ட பெண்ணின் தலையை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் சென்னை பெருங்குடி குப்பைக்கிடங்கில் இளம்பெண் ஒருவரது இரண்டு கால்கள் மற்றும் ஒரு கை வெட்டப்பட்ட நிலையில் ஒரு பையில் கிடந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்துபோன அங்கிருந்தவர்கள் இதுகுறித்து புகார் அளிக்க போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஆனால் போலீஸார் குற்றவாளியை நெருங்க முடியாமல் திணறி வந்தனர்.
 
இந்நிலையில் இரண்டு வார தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் போலீஸார் அந்த பெண்ணின் கணவரை சுற்றி வளைத்தனர். அந்த பெண் தூத்துக்குடியை சேர்ந்த சந்தியா ஆவார். இவரின் கணவர் சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணன் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளார். போலீஸார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். மனைவி மீதான சந்தேக புத்தியே இந்த கொலைக்கான காரணம் என தெரிகிறது.
 
சந்தியாவின் உடல் பாகங்கள் மற்றும் தலையை பெருங்குடி குப்பைக் கிடங்கில் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸார் இன்று சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனனை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments