Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம்- சமூகவலைதளங்களில் எழும் எதிர்ப்பு!

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் பணியிடமாற்றம்- சமூகவலைதளங்களில் எழும் எதிர்ப்பு!
, வியாழன், 8 அக்டோபர் 2020 (15:39 IST)
கடந்த மாதம் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த மூன்று காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றும் ரங்கராஜ், ரஞ்சித், அசோக் ஆகிய மூன்று காவலர்களும் கடந்த செப்டம்பர் 17 அன்று பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது சம்மந்தமானப் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.

இந்நிலையில் அவர்கள் மூவரையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . இந்த பணியிட மாற்ற உத்தரவு உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன. அதே போல சமூகவலைதளங்களிலும் காவலர்களுக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேசிக் ப்ளான்களை சூப்பர் ப்ளான்களாக்கிய ஏர்டெல்!