Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார்: சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏவிடம் விசாரணை!

Webdunia
வியாழன், 30 டிசம்பர் 2021 (13:13 IST)
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி புகார் குறித்து சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் இடம் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
ஆவின் பால் துறையில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஜேந்திர பாலாஜி தற்போது தலைமறைவாக இருப்பதாகவும் அவரை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பணமோசடி புகார் தொடர்பாக சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மனிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 
 
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments