Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தலைத்தூக்கும் பேனர் கலாச்சாரம்: சிக்கலில் அதிமுகவினர்!

மீண்டும் தலைத்தூக்கும் பேனர் கலாச்சாரம்:  சிக்கலில் அதிமுகவினர்!
, செவ்வாய், 7 ஜூலை 2020 (11:03 IST)
அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக கட்சி பிரமுகரின் திருமணத்திற்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்ததில் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. 
 
இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர்களும் தங்களுடைய ரசிகர்கள் யாரும் தங்களுக்கு பேனர் வைக்ககூடாது என வலியுறுத்தினர்.
 
இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏ. வி.என்.ரவியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக அனுமதியின்றி பேனர் வைத்ததாக, அதிமுகவை சேர்ந்த கணேஷ், ரமேஷ் ஆகிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
 
பேனர் கலாச்சாரம் மீண்டும் தலைத்தூக்க துவங்கி இருப்பது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தியுள்ளதோடு அதிமுகவினருக்கு இது மீண்டும் சிக்கலை கொடுத்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்க ஜி பத்தி பேசணும்னா நேர்ல பேசு.. விவாதத்துக்கு வராத! – கலாய்த்த உதயநிதி கடுப்பான பாஜக