Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வட மாநிலத்தவர் குறித்து அவதூறு! – சீமான் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு!

வட மாநிலத்தவர் குறித்து அவதூறு! – சீமான் மீது கூடுதல் பிரிவுகளில் வழக்கு!
, ஞாயிறு, 12 மார்ச் 2023 (10:49 IST)
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வடமாநிலத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான் அவ்வபோது பேசும் சில கருத்துகள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. சமீபத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சீமான் அருந்ததியர் சமூக மக்கள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து பல பகுதிகளில் சீமானுக்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சமீபமாக வடமாநில தொழிலாளர்கள் குறித்து சீமான் பேசியதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே அருந்ததியர் மக்கள் குறித்து பேசியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது வடமாநிலத்தவர் குறித்து அவதூறாக பேசியதாக மேலும் மூன்று பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது: இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!