Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது: இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!

தமிழக மீனவர்கள் 16 பேர் கைது: இலங்கை கடற்படையின் தொடர் அட்டகாசம்..!
, ஞாயிறு, 12 மார்ச் 2023 (10:27 IST)
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அவ்வப்போது சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் 16 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இராமேஸ்வரம் நெடுந்தேவு அருகே தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென ரோந்து பணிக்காக வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 16 மீனவர்களை கைது செய்தனர். மேலும் மீனவர்களின் இரண்டு படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்து கொண்டு சென்று உள்ளனர். 
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 16 மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரும் நிலையில் மத்திய மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மத்தியில் கோரிக்கை இழந்துள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மதுரை விமான நிலையம் சம்பவம்: எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு!