Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவி பாலியல் புகார்; சிவசங்கர் பாபா மீது போக்சோ வழக்கு!

Webdunia
ஞாயிறு, 13 ஜூன் 2021 (11:48 IST)
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவி அளித்த பாலியல் புகாரின் பேரில் அவர்மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள சுஷில்ஹரி பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவி புகார் அளித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணைக்கு முற்பட்டபோது சிவசங்கர் பாபா உத்தர்கண்டில் இருப்பதாகவும் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிவசங்கர் பாபாவுக்கு எதிரான தகவல்களை திரட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்