Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்கு! – விதிமுறைகளை மீறியதாக புகார்!

Advertiesment
Tamilnadu
, செவ்வாய், 1 செப்டம்பர் 2020 (09:08 IST)
ஊரடங்கு விதிகளை மீறியதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தேர்தல் பணிகளில் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் பாஜக மாவட்ட அலுவலகம் திறக்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அலுவலக திறப்பு விழாவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 100க்கும் அதிகமானோர் கலந்து கொண்டதாகவும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்றும் குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தியாகதுருகம் போலீஸார் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட சிலர் மீது விதிமீறல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மோதி அரசுக்கு வெட்கமும் இல்லை; தவறுகளையும் ஏற்றுக்கொள்ளாது' - ப. சிதம்பரம்