Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெங்களூர் நீதிமன்றம் அருகே போலீஸ் தடியடி

பெங்களூர் நீதிமன்றம் அருகே போலீஸ் தடியடி
, புதன், 15 பிப்ரவரி 2017 (17:52 IST)
பெங்களூர் நீதிமன்றம் அருகே காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர்.


 

 
பெங்களூர் நகர் உரிமையியல் நீதிமன்றம் வளாகம் அருகே காவல்துறையில் தடியடி நடத்தி வருகின்றனர்.
 
சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சென்றுள்ளார். அந்த பகுதியில் பொதுமக்கள் மற்றும் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. அதைத்தொடர்ந்து வழக்கறிஞர் மற்றும் சசிகலா உடைகள் எடுத்துச் சென்ற கார் மீது கல் வீசி தாக்குதல் நடந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் அப்பகுதியில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
மேலும் சுதாகாரன் பெங்களூர் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் கோரி மனு அளித்துள்ளார். உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவகாசம் கோரி மனு அளித்துள்ளார். அவர் இன்னும் அந்த பெங்களூர் நீதிமன்ற பகுதிக்கு சென்று சேரவில்லை.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீதிமன்றத்தில் சுதாகரன் இன்னும் சரண் அடையவில்லை - பெங்களூரில் பரபரப்பு