Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிமன்றத்தில் சுதாகரன் இன்னும் சரண் அடையவில்லை - பெங்களூரில் பரபரப்பு

நீதிமன்றத்தில் சுதாகரன் இன்னும் சரண் அடையவில்லை - பெங்களூரில் பரபரப்பு
, புதன், 15 பிப்ரவரி 2017 (17:39 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய தினகரன் இன்னும் அங்கு சரண் அடையவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது...


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா உள்ளிட்ட 3 பேர் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து இன்று சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ராஹர கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று மாலை 5 மணியளவில் சரணடைந்தனர்.
 
ஆனால், சுதாகரன் மட்டும் இன்னும் அங்கு சென்று சரணடையவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 
உடல் நிலை சரியில்லை என  காரணம் காட்டி, இவர்கள் மூவரும், நீதிமன்றத்தில் சரண் அடைய 4 வாரங்கள் அவகாசம் கேட்டனர். ஆனல், அதை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். இந்நிலையில், இன்று மாலை, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் இன்று மாலை 5 மணியளவில் சரண் அடைந்தனர். ஆனால், சுதாகரன் மட்டும் இன்னும் சரண் அடையவில்லை.. 
 
இந்நிலையில், உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் சரண அடைய அவகாசம் வேண்டும் எனக் கூறி பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சுதாகரன் மனு தாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வழியாக நீதிமன்றத்தில் சரணடைந்துவிட்டார் சசிகலா!