Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடங்குமா இந்த மக்கள் கூட்டம்? அதிகரிக்கும் கைது எண்ணிக்கை!

அடங்குமா இந்த மக்கள் கூட்டம்? அதிகரிக்கும் கைது எண்ணிக்கை!
, புதன், 29 ஏப்ரல் 2020 (12:28 IST)
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,01,111 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தகவல். 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்ட எல்லைகள் பிரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து எதற்காகவும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 
 
மக்கள் தேவையில்லாமல் கூடுவதை தவிர்க்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுதவிர ஊரடங்கு விதிகளை மீறி ஊர் சுற்றுவோர் மீது வழக்கு பதிவு செய்தல், கைது செய்தல், வாகனங்களை பறிமுதல் செய்தல் ஆகிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,01,111 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, 3,55,603 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர், 3,36,426 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் ரூ. 3.47 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் மல்லையா, மெஹூல் சோக்ஸி கடன்கள் நீக்கம்! – ஆர்பிஐ அறிவிப்பால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!