ஊரடங்கிலும் மதுபானத்தை கடத்தி விற்பனை! – 600 பாட்டில்களுடன் பிடிபட்ட வாகனம்!

Webdunia
ஞாயிறு, 30 மே 2021 (13:41 IST)
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் விழுப்புரம் அருகே வெளிமாநிலத்திலிருந்து மதுபானங்களை கடத்தி வந்த வாகனம் பிடிபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் மற்றும் தனியார் மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக எல்லை பகுதி மாவட்டங்களை சேர்ந்த பலர் மது வாங்க ஆந்திர எல்லைக்குள் நுழைவது உள்ளிட்டவையும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சோதனைச்சாவடியில் போலீஸார் சோதனை பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக ஆட்களை ஏற்றிக் கொண்டு டாடா ஏசிஇ வாகனம் ஒன்று சென்றுள்ளது.

அதில் சோதனை நடத்தியதில் அதன் மேற்கூரையில் 600 மதுபான பாட்டில்களை பதுக்கி கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வாகனத்தையும், மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீஸார் டிரைவரையும் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்க முடிவு..!

மசோதாக்களை முடக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம்.. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி..!

அஸ்ஸாம் வாக்காளர் பட்டியலில் வெளிமாநில வாக்காளர்களை சேர்க்க சதி: காங்கிரஸ் புகார்

பங்குச்சந்தை 2வது நாளாக ஏற்றம்.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments