Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திடீர் திருப்பம்!

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (07:07 IST)
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக விசாரணை செய்து வரும் நிலையில் இந்த வழக்கில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் திருடு போயிருந்த நகைகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி ஒருவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் வட்டாரம் தெரிவிக்கின்றது
 
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டதால் இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
மேலும் இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி, காவல்துறை டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளதால் இந்த வழக்கில் மேலும் சில திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை பேச்சு.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.. அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

ராகுல், கார்கே பேசவில்லையா? நிர்மலா சீதாராமனுக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை..!

மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் விலை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments