Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை.. காவல்துறை எச்சரிக்கை

Arun Prasath

, ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (09:28 IST)
ஆயுத பூஜையை ஒட்டி சாலையில் பூசணிக்காயை உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

சாலைகளின் நடுவே திருஷ்டி பூசணிக்கயை உடைப்பதை தமிழர்கள் ஒரு சம்பிரதாய வழக்கமாகவே வைத்துள்ளனர். இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள், வழுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

அதுவும் ஆயுத பூஜை என்றால் சில பூஜைகள் செய்து பூசணிக்காயை சாலைகளில் உடைப்பது பெரும்பாலான மக்களால் கடைபிடிக்கப்படும் ஒன்று. இந்நிலையில் சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பான முறையில் பூஜைகள் செய்யுமாறு காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து காவல் துறை எச்சரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் திரும்பும் முஷரப்: அரசியலா? கைதா?