Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காசு கொடுத்து சேர்கிறார்கள்.. இதான் தரம் உயர்த்துதலா? – நீட் குறித்து ராமதாஸ் கேள்வி!

Webdunia
ஞாயிறு, 27 மார்ச் 2022 (15:02 IST)
நீட் தேர்வு தரவரிசையில் கடைசி இடங்களை பிடித்தவர்கள் மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களிலும் தரவரிசை அடிப்படையிலேயே மருத்துவ படிப்புக்கு சீட் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நீட் தேர்வில் மோசடி நடப்பதாக குற்றம் சாட்டி கேள்வி எழுப்பியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “நீட் தேர்வின் அடிப்படையிலான அனைத்திந்திய தரவரிசைப் பட்டியலில் 9,19,400-க்கும் பிந்தைய இடத்தைப் பிடித்த மாணவருக்கு தமிழ்நாட்டிலும், 9,17,875வது இடத்தைப் பிடித்தவருக்கு இராஜஸ்தானிலும், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் “மதிப்பெண்களின் அடிப்படையில் அல்லாமல் பணத்தின் அடிப்படையிலேயே இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படித் தான் நீட் தேர்வின் மூலம் மருத்துவக் கல்வியின் தரம் உயர்த்தப்படுகிறதா? என்ற வினா எழுகிறது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா-சீனா கூட்டாளிகள்: அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு மத்தியில் சீனாவின் அதிரடி அறிவிப்பு

ஜம்மு-காஷ்மீரில் திடீர் வெள்ளம்: குழந்தையைத் தோளில் சுமந்து சென்று உதவிய போலீஸ் அதிகாரி

ஹைதராபாத்தில் மதமாற்ற புகார்: முன்னாள் கணவர் மீது 'லவ் ஜிஹாத்' குற்றச்சாட்டு

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக எந்த ஒப்பந்தங்களும் கையெழுத்தாகாது: மத்திய அமைச்சர் திட்டவட்டம்

ஆந்திராவில் மகளிருக்கு இலவச பேருந்து: முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments