Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரூர் அருகே பாமக கொடிக்கம்பத்தை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்

Webdunia
திங்கள், 10 செப்டம்பர் 2018 (18:26 IST)
கரூர் மாவட்டம் தாந்தோன்றி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளியனை பகுதி பேருந்து நிருத்தத்தில் பா.ம.க கொடிக்கம்பம் நடப்பட்டு பலகாலமாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த வழியாக பா.ம.க தாந்தோன்றி நகர செயலாளர் ராஜா தனது குடும்பத்துடன் தனது சொந்த ஊரான வெள்ளியனைக்கு சென்றுள்ளார். அவ்வாறு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்ப வருகையில் அங்கு நடப்படிருந்த பா.ம.க கொடிக்கம்பத்தினை காணவில்லை.



இதனை சந்தேகமடைந்த நகர செயலாளர் ராஜா அருகில் உள்ள வெள்ளியனை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் வெள்ளியனை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியை சேர்ந்த சில மர்ம நபர்களால் கொடிக்கம்பம் வெட்டி சாய்க்கப்படிருந்தது தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா கரூர் மாவட்ட பா.ம.க மாநில துணை பொதுசெயலாளர் பி.எம்.கே.பாஸ்கரனை தொடர்பு கொண்டு வெள்ளியனையில் நடந்ததை கூறியுள்ளார். இதனிடையே வெள்ளியனை பகுதிக்கு விரைந்த பா.ம.க மாவட்ட தலைவர் ஐ.எம்.பாபு. , ஒன்றிய செயலாளர் முத்து மற்றும் துணைச்செயலாளர் வரதன் வெள்ளியனை காவல் நிலையத்திற்க்கு வந்து நடந்ததை புகாராக காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாபரிடம் புகார் தெரிவித்தனர்.

புகாரின் அடிப்படையில் துரித நடவடிக்கை மேற்கொண்டதில் கொடிக்கம்பத்தினை எதற்க்காக வெட்டி சாய்தனர் என்றி விசாரித்து சம்மந்தப்பட்ட நபர்களை எச்சரித்துவிட்டு அவர்களிடம் இது போன்ற செயல்களில் இனிமேல் ஈடுபட மாட்டோம் என எழுதி வாங்க்கிக்கொண்டனர். பின்னர் பா.ம.க கொடிக்கம்பம் அதே இடத்தில் வர்ணம் பூசப்பாட்டு நடப்பட்டது. இதனால் அங்கு சற்று பதட்டமான சூழல் நிலவியது.

பேட்டி - ஐ.எம்.பாபு  - பா.ம.க கரூர் மாவட்ட தலைவர்

வீடியோவை காண

சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments