Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருணாநிதியின் இறுதி அஞ்சலி - சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

Advertiesment
கருணாநிதியின் இறுதி அஞ்சலி - சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி
, புதன், 8 ஆகஸ்ட் 2018 (10:31 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்த இந்திய பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மரணமடைந்தார். அவரின் மரணம் திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
 
அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் தொடர்ச்சியாக அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
webdunia
இந்நிலையில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த இந்திய பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மோடியை வரவேற்றனர்.
 
இன்னும் சற்று நேரத்தில் ராஜாஜி ஹாலுக்கு வருகை தரும் மோடி, கருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. இருந்திருந்தால் மெரினாவில் இடம் கொடுத்திருப்பார் : கிருஷ்ணபிரியா