Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ராஜராஜன், ராஜேந்திரனுக்கு சிலைகள்: பிரதமர் மோடி அறிவிப்பு!

Siva
ஞாயிறு, 27 ஜூலை 2025 (16:12 IST)
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாமன்னர்கள் ராஜராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் ஆகியோருக்கு தமிழகத்தில் சிலைகள் நிறுவப்படும் என்று அறிவித்தார்.
 
விழாவில் பேசிய பிரதமர், சோழப் பேரரசின் புகழ், ஜனநாயகம், நீர் மேலாண்மை, சைவப் பக்தி, மற்றும் இந்தியாவின் பாதுகாப்புக்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
 
மேலும், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் வெளியிட்டார். களவாடப்பட்ட 36 தமிழக கலை சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
மேலும்  ராஜராஜன், ராஜேந்திரன் இருவரும் சக்தி வாய்ந்த கடற்படையை வளர்த்தெடுத்ததாகவும், ராஜேந்திரன் அந்த கடற்படையை விஸ்தரித்ததாகவும் கூறினார்.
 
'ஆபரேஷன் சிந்தூர்' பாரதத்தின் வலிமையை வெளிப்படுத்தியது என்றும், பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் பதிலடி எப்படி இருக்கும் என்பதற்கு அது ஒரு உதாரணம் என்றும் தெரிவித்தார். புதிய இந்தியாவுக்கு சோழ சாம்ராஜ்ஜியம் ஒரு வரைபடத்தை தருவதாகவும் குறிப்பிட்டார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’வணக்கம் சோழ மண்டலம்’.. சிவனை வழிபடுபவன் சிவனில் கரைகிறான்! - பிரதமர் மோடி பேச்சு!

ஓலைச்சுவடி படிக்கும் தஞ்சை மணிமாறன்! - மன் கீ பாத்தில் புகழ்ந்து வாழ்த்திய பிரதமர் மோடி!

துணை முதலமைச்சர் பதவி! ஆசைக்காட்டினால் சென்று விடுவேனா? - திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

நாளை மறுநாள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பு.. நிறைபுத்தரிசி பூஜை தேதியும் அறிவிப்பு..!

கல்லூரி மாணவர்கள் விடுதியில் 5000 கஞ்சா சாக்லேட்டுக்கள்.. சென்னை அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments