Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்.. அண்ணாமலை பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பு..!

Siva
செவ்வாய், 30 ஜனவரி 2024 (07:55 IST)
பிரதமர் மோடி கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு முறை தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்ட தக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நடந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 18ஆம் தேதி நிறைவு பெறுகிறது.

இந்த நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 18ஆம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவு விழாவில் அவர் பங்கேற்கிறார்

அதன் பின் அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது  

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

காக்கிச் சட்டை போட்ட எமனுக: அஜித்குமார் மரணம் குறித்து நடிகர் தாடி பாலாஜி..!

அரசாங்கம் கொலை செய்தால் ஏன் கொலை வழக்காக பதிவு செய்வதில்லை: மனித உரிமை செயல்பாட்டாளர் கேள்வி

சிவகங்கை அஜித்குமாரை கொடூரமாக தாக்கும் காவலர்கள்! அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments