Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த பிளஸ் டூ மாணவன்

12 வயது சிறுமியை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த பிளஸ் டூ மாணவன்
, சனி, 27 ஏப்ரல் 2019 (08:17 IST)
திண்டுக்கல் அருகே உள்ள மோர்பட்டி என்ற பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவரது 12 வயது சமீபத்தில் உடலில் மின்சாரம் பாய்ந்து மரணம் அடைந்திருந்தார். ஆனால் அவரது உடலில் கீரல்களும் ரத்தக்காயங்களும் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பெற்றோர்கள் சந்தேகம் அடைந்து இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தனர்.
 
சிறுமியின் வீடு அருகே மூன்று சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்ததாகவும், அவர்கள் மீது தங்கள் சந்தேகம் இருப்பதாகவும், பெற்றோர்கள் அந்த புகாரில் தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அதன்பின்னர் அந்த சிறுமியின் உடலில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த பிளஸ் டூ மாணவன் என்ற திடுக்கிடும் தகவல் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது
 
இதனையடுத்து அந்த சிறுமியை கொலை செய்த பிளஸ் டூ மாணவனை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐபிஎல் போட்டியை பார்த்துவிட்டு ஊர் திரும்பிய 3 பேர் விபத்தில் பலி