Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு வருடமாக வாடகை தராமல் காலியும் செய்யாமல் மிரட்டிய பியூஷ் மனுஷ்? போலீஸில் புகார்

ஒரு வருடமாக வாடகை தராமல் காலியும் செய்யாமல் மிரட்டிய பியூஷ் மனுஷ்? போலீஸில் புகார்
, திங்கள், 24 பிப்ரவரி 2020 (17:54 IST)
ஒரு வருடமாக வாடகை தராமல் காலியும் செய்யாமல் மிரட்டிய பியூஷ் மனுஷ்?
சமூக ஆர்வலர் என்று தன்னைத் தானே சொல்லிக்கொண்டு திரியும் ஒரு சிலர் உண்மையில் நம் சமூக ஆர்வலராக இருக்கின்றார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்த வகையில் சமூக ஆர்வலர் என்று பெயர் பெற்ற பியூஸ் மானுஷ், தான் குடியிருக்கும் வீட்டை காலி செய்ய முடியாது என்றும் ஒரு வருடமாக வாடகை தர மறுத்து வருவதாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இதுகுறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் வீட்டு உரிமையாளரான பெண் ஒருவர் பியூஸ் மானுஷ் வீட்டிற்கு சென்று வீட்டை காலி செய்து கொள்ளுங்கள் என்று கூறியதற்கு அவரை தகாத வார்த்தைகள் பேசியதாகவும், அதுமட்டுமின்றி பெண் என்றும் பாராமல் அவரை பியுஷ் மானுஷ் தாக்கியதாகவும் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்
 
ஒரு வருடமாக வாடகையும் தராமல் வீட்டு உரிமையாளரை அவர் தகாத வார்த்தைகளை பேசி உள்ளதாகவும் காவல்துறையினர் அந்த பெண் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விரைவில் போலீசார் விசாரணை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது வீட்டின் வாடகையும் தராமல், காலியும் செய்யாமல் வீட்டு உரிமையாளரான பெண்ணை அடிப்பதுதான் சமூக ஆர்வலரின் பணியா? என  நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கும் டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்...