இன்னும் சில மணி நேரங்களில் வலுவடையும் புரெவி! – வானிலை ஆய்வு மையம்!

Webdunia
புதன், 2 டிசம்பர் 2020 (09:13 IST)
வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் மேலும் வலுவடைவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த மண்டலம் தீவிரமடைந்த நிலையில் புயலாக மாறியுள்ளது. புரெவி என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் தென் தமிழகத்தை நெருங்கி வரும் நிலையில் பாம்பன் – குமரி இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தற்போது பாம்பனிலிருந்து 530 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் 5 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரள பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாஷிங் மெஷின்.. ஃபிரிட்ஜ்.. மிக்சி.. எக்சேஞ்சுக்கு 8 ஆயிரம் கூப்பன்!.. திமுக தேர்தல் வாக்குறுதி!...

அப்ப அதிமுக.. இப்ப தவெக!. கட்சி மாறி சீட் வாங்கிய வேட்பாளர்கள்!..

அமெரிக்காவுக்கு குறி!.. அதிநவீன ஏவுகனை என்ஜினை பரிசோனை செய்த வட கொரியா!...

ஒரே அடி!.. அமெரிக்காவின் 4750 கோடி விமானத்தை இரண்டாக பிளந்த ஈரான்!..

ஈரான் போர்!.. டிரம்புக்கு எதிராக களமிறங்கிய அமெரிக்கர்கள்!. மாபெரும் போராட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments