Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாகனங்களின் கண்ணாடிகளில் அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் ஒட்ட தடை: பொதுநல மனு

வாகனங்களின் கண்ணாடிகளில்  அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள் ஒட்ட தடை: பொதுநல மனு

Siva

, வியாழன், 9 மே 2024 (13:14 IST)
வாகனங்களில் உள்ள   நம்பர் பிளேட்டுகளில் எண்கள் தவிர வேறு எதையும் எழுத தடை செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து காவல்துறையினர் இந்த விதிகளை மீறுபவர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த கட்டமாக வாகனங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், மத அடையாளங்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் ஓட்ட தடை விதிக்க வேண்டும் என்று பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி மனுதாக்கல் செய்துள்ள நிலையில் கார்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமெனவும் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையை சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் வாகனங்களின் கண்ணாடிகளில் மத சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்களை ஒட்ட தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து இந்த மனுவுக்க்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோடைமழையால் 12,000 நெல் மூட்டைகள் சேதம்.. டாக்டர் ராமதாஸ் கண்டனம்..