Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !

பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !
, வெள்ளி, 27 மார்ச் 2020 (20:46 IST)
பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் திறக்க கட்டுப்பாடு !

தமிழகத்தில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில்தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  வரும் ஞாயிற்றுகிழமை முதல் கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், காலை 6 மணி முதல் மதியம் 2. 30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் - முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், காய்கறி உள்ளிட்ட சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள்  மாலை ஆறு மணி முதல் காலை 6 மண்இ வரை மட்டுமே  இயங்கும்.

மருந்தகங்கள்,  உணவகங்கள் நாள் முழுவதும் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி, ஜோமோட்டோ , உபேர் நிறுவனங்கள் உணவு விநியோகிக்க நேர கட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது.அதில் காலை 7 முதல் 9: 30 மணி வரை; மதியம் 12 முதல் 2: 30 மணி வரை: மாலை 6 முதல் 9 மணி வரை ஆகும்.

விளைபொருட்களை  180 நாட்கள் சேமிப்புக் கிடங்குகளில் வைத்து பாதுகாக்கலாம், சேமிப்புக் கிடங்கிற்கான வாடகைக் கட்டணத்தை  30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பெட்ரொல் பங்குகள் காலை 6 மணி முதல் மதியம் 2: 30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டயாலிசிஸ் சிகிச்சை வேண்டுமென்றால் 108 ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் – முதல்வர் பழனிசாமி