Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட இடைவெளிக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

Webdunia
செவ்வாய், 4 மே 2021 (07:25 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது என்பது தெரிந்ததே. ஐந்து மாநில தேர்தல் காரணமாகத்தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லை என்றும் தேர்தல் முடிவுகள் வெளியானதும் மீண்டும் உயரும் என்றும் செய்திகள் வெளியானது 
 
இந்த செய்திகளின் படி சரியாக ஐந்து மாநில தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியானவுடன் தற்போது பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம் 
 
சென்னையில் பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் உயர்ந்து, பெட்ரோல் லிட்டர் விலை ரூ.92.55 காசுகள் என விற்பனையாகிறது. அதேபோல் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் விலை ரூ.85.90 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது. 
 
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் தற்போது உயர்ந்து கொண்டே இருப்பதால் இனி தொடர்ச்சியாக பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments