Publish Date: Fri, 22 Mar 2019 (11:09 IST)
Updated Date: Fri, 22 Mar 2019 (11:15 IST)
தேர்தலின் போது வேட்பாளரை அறிவிப்பது, பின்னர் காரணமே இல்லாமல் வேட்பாளரை மாற்றுவது என்பது ஜெயலலிதாவின் ஸ்டைல். அந்த வகையில் ஜெயலலிதாவின் வழியை பின்பற்றி தற்போது பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை அதிமுக தலைமை திடீரென மாற்றியது
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டபோது அதில், பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் முருகன் என்பவர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் தற்போது பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் முருகனுக்கு பதில் மயில்வேல் என்பவர் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
வேட்பாளர் மாற்றத்திற்கு அதிமுக தலைமை காரணம் எதுவும் சொல்லவில்லை என்றாலும், முருகன் ஒரு அரசு ஊழியர் என்றும், தேர்தலில் போட்டியிடும் முன் அரசுவேலையை ராஜினாமா செய்ய அவர் தயங்கியதால் வேட்பாளர் மாற்றப்பட்டதாகவும் அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.