Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனிமையில் உல்லாசம் செய்த ஊராட்சி தலைவர் – பெண் வி.ஏ.ஓ! – சுற்றி வளைத்த மக்கள்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (09:39 IST)
சிவகங்கை அருகே ஊராட்சி தலைவருடன் உல்லாசமாய் இருந்த பெண் வி.ஏ.ஓ-வை பொதுமக்கள் வீட்டிற்குள் சிறை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சொக்கநாதன்புத்தூர் பகுதியை சேர்ந்தவர் வித்யா. அந்த பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தின் ஊராட்சி தலைவர் கண்ணனுக்கும், வித்யாவுக்கும் ரகசிய தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த விசயம் கிராம மக்களுக்கும் தெரிந்திருந்தாலும் அமைதி காத்து வந்துள்ளனர். இந்நிலையில் கண்ணன் வீட்டிற்கு சென்ற வித்யா அவருடன் தனிமையில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து கண்ணன் வீட்டிற்கு விரைந்த வித்யாவின் கணவர் மற்றும் பொதுமக்கள் வீட்டை பூட்டி இருவரையும் உள்ளேயே சிறை பிடித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். அங்குள்ள மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ள போலீசார் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து அவர்கள் இருவரையும் வெளியே மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments