Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கமல்ஹாசனை மக்கள் நம்பமாட்டார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்

கமல்ஹாசனை மக்கள் நம்பமாட்டார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
, சனி, 4 மே 2019 (17:02 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. தமிழகத்தில் வேலூர் தொகுதியைத் தவிர்த்து 38 தொகுதிகளுக்காக  நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை  இடைத்தேர்தலில் மக்கள் உற்சாகத்துடன் வந்து  வாக்களித்தனர்.
மேலும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
 
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்ற பகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம்   கூறியதாவது :
 
’’புதிதாக வாங்கும் ஸ்டார்ச் லைட் பேட்டரியில் தான் லைட் பிரகாசமாக இருக்கும். பின்னர் போகப்போக ஒன்றும் இல்லாமல் போய்விடும். மக்கள் கமல்ஹாசனை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள் நம்பவும்மாட்டார்கள். ஆரம்பத்தில் அரசியல் நுழையும் எல்லா  புதிய கட்சிகளுக்கும் அதேநிலைதான் ’’இவ்வாறு கூறினார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பம்பர் ஆஃபர்!! கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்