Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரையாத விநாயகர் சிலைகள்.. மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரையாத விநாயகர் சிலைகள்.. மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு
, திங்கள், 25 செப்டம்பர் 2023 (09:55 IST)
தமிழகம் முழுவதும் சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் ஒரு சில பகுதிகளில் விநாயகர் சிலைகளை கலைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. 
 
பட்டினப்பாக்கம் கடற்கரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் நேற்று விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் தற்போது இதில் ஒரு புதிய சிக்கல் எழுந்துள்ளது. நேற்று விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கப்பட்ட நிலையில் கரையாத விநாயகர் சிலைகளால் குப்பை மேடாக பட்டினப்பாக்கம் கடற்கரை காட்சியளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதுகுறித்து தக வல் கிடைத்தவுடன் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறார். மேலும் கரையாத சிலைகளை அகற்றுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு: அக்டோபர் 5ஆம் தேதி வரை சிறை..!