இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (09:24 IST)

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ‘தமிழ்நிலம்’ வலைதளம் அடுத்த நான்கு நாட்களுக்கு செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான தமிழ்நிலம் மென்பொருளில் விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

 

எனவே இன்று 28ம் தேதி காலை 10 மணி முதல் 31ம் தேதி மாலை 4 மணி வரை 4 நாட்களுக்கு இணைய வழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் தமிழ்நிலம் (https://tamilnilam.tn.gov.in/Revenue/) மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html ஆகிய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள்.. டிசம்பர் 19-ஆம் தேதி திட்டம் தொடக்கம்..!

பாகிஸ்தானை அழிக்க உள்ளே புகுந்த TTP தீவிரவாதிகள்.. 24 பேர் கைது..!

மதுரை புதிய மேம்பாலத்திற்கு 'வீரமங்கை வேலுநாச்சியார்' பெயர்.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

அடுத்த வருஷமாவது தீபம் ஏத்துவோம்!... இயக்குனர் மோகன் ஜி ஃபீலிங்!...

சென்னையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம்: இன்று சவரன் ரூ.96,320

அடுத்த கட்டுரையில்
Show comments