“செல்ஃபோனை ஒரு மணி நேரம் ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள்”..

Arun Prasath
புதன், 6 நவம்பர் 2019 (13:26 IST)
வருகிற 14 ஆம் தேதி ஒரு மணி நேரம் செல்ஃபோன்களை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் என பள்ளிக்கல்வித் இயக்ககம் வலியுறுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வி இயக்ககம் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், குழந்தைகள் தினத்தன்று இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பெற்றோர்கள் செல்ஃபோன்களை அணைத்து வைத்துவிட்டு தங்களுடைய குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் என பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், www.gadgetfreehour.com என்ற இணையத்தளத்தில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments