Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பா. ரஞ்சித்துக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல நடிகர்!

பா. ரஞ்சித்துக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல  நடிகர்!
, புதன், 12 ஜூன் 2019 (14:34 IST)
பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது திரைதுறையினர் மத்தியிலும், அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகரும்,சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ், பா.ரஞ்சித்துக்கு  எச்சரிக்கை விடுக்கும் விதமான அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி , காலா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவர் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறிவருகிறார். ஆனால்  சில நேரங்களில் அவர் கூறும் கருத்துகள் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறது.
 
கடந்த 5 ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் திருப்பனந்தாள் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பா.ரஞ்சித் கலந்துகொண்டார். அப்பொது பேசிய ரஞ்சித் மன்னர் ராஜ ராஜ சோழன் பற்றி கடுமையான விமர்சித்தார்.
 
அதில் முக்கியமான மன்னர் ராஜராஜனை அவன்,இவன் என ஒருமையில் விமர்சித்தார். ஒருகட்டத்தில் ராஜ ராஜ சோழன் ஒரு அயோக்கியன் என்றும் ராஜ ராஜ சோழன் காலத்தில் தான் தலித்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது என்று கூறினார். இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
 
பா. ரஞ்சித்தின் பேச்சுக்கு  சமுக வலைதளங்களிலும் கடுமையான விமர்சங்கள் எழுந்தது. பல இந்துஅமைப்புகளும் அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்தன.
 
இதனையடுத்து பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலிஸார் சமீபத்தில்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். கலவரத்தைத்தூண்டும் விதமாகப் பேசியதாக 153,153A ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
மேலும் கலவரத்தைத் தூண்டும் விதமாக பேசியதாக பா,.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது.
 
இயக்குநர் பா. ரஞ்சித் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் சினிமாதுறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது நடிகர் கருணாஸ், பா, ரஞ்சித்துக்கு எச்சரிக்கை அளிக்கும் விதமாக ஒரு அறிக்கை ஒன்றை வெளியிடுள்ளார். 
 
அதில்,எங்கள் நிலங்களைப் பறித்தார்! பார்ப்பனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்!பெண்களை வேசியாக்கினார்! இப்படி வரலாறு தெரியாத கட்டுக்கதைகளை எல்லாம் உங்கள் தேவைகளுக்காக மாபெரும்  ஒரு இன வரலாற்றைக் கொச்சைப்படுத்த வேண்டாம்! .
மேலும், உங்களைப்போல முன்னோரின் வரலாற்றைக்  கற்காமல் கதைவிடாதீர்கள்.இத்துடன்  நிறுத்திக்கொள்ளுங்கள்! தமிழ் பேரரசன் இராசராசச்சோழன் என்பவன் இந்தப் பூமிப்பந்தின் மனித அதிசயம்! தமிழர் மரபின் உச்சம்! நீங்களும் இந்த  தமிழர் இனத்தில் பிறந்தவர் என்று பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள்! 
 
அதைவிடுத்து பார்ப்பனர்களின் பங்காளியைப் போல் எதிர்வரிசையில் நின்றுகொண்டு கொக்கரிக்காதீர்கள்.! தமிழ் முன்னோர்களின் வரலாறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்! பழையானவற்றைப் பேசுவதை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் ! இது அறிவுரை கலந்த எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குளிக்கும்போது இனி மேக்கப் கலையாது: வேடிக்கையூட்டும் புதிய கண்டுபிடிப்பு