கனமழை எதிரொலி: சென்னை குடியிருப்புகளில் 1,000-க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்பு!

Mahendran
புதன், 29 அக்டோபர் 2025 (11:49 IST)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
 
கடந்த 10 நாட்களில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 601 அழைப்புகள் பெறப்பட்டன. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 424 அழைப்புகள் வந்தன. மீட்கப்பட்டவற்றில் நாகப் பாம்பு, கட்டுவிரியான் உட்பட 103 விஷமுள்ள பாம்புகளும், 498 விஷமற்ற பாம்புகளும் அடங்கும்.
 
மேடவாக்கம், தாம்பரம், பள்ளிக்கரணை, வேளச்சேரி போன்ற தென்சென்னை பகுதிகளில் இருந்துதான் பெரும்பாலான மீட்பு அழைப்புகள் வந்துள்ளன. மீட்கப்பட்ட அனைத்து பாம்புகளும் வனத் துறையிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments