Publish Date: Wed, 17 Mar 2021 (15:57 IST)
Updated Date: Wed, 17 Mar 2021 (16:01 IST)
9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் பொதுத்தேர்வு நடத்த மதிப்பெண் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதில், வரும் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க அறிவுறுத்தியுள்ளது.
மேலும், 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு 11 ஆம் வகுப்பு சேர்க்கை எப்படி நடத்துவது என்ற குழபம் இருந்த நிலையில் பொதுத்தேர்வு நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் கொரோனாபரவல் உள்ள காரணத்தால் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.