Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்
, திங்கள், 20 நவம்பர் 2023 (18:27 IST)
தமிழகத்தில் இரண்டு நாட்கள் மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதையும் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி உள்ளன என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ள நிலையில் நவம்பர் 22, 23 ஆகிய இரண்டு நாட்கள்  மிக கனமழை பெய்யும் என்ற ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

இதனை அடுத்து இரண்டு நாட்களும் பொதுமக்கள் மற்றும் அரசு நிர்வாகங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு முதல்வர் பாராட்டு