Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை பெய்யும்: இந்திய வானிலை ஆய்வு மையம்..!

Advertiesment
Rain
, திங்கள், 20 நவம்பர் 2023 (10:53 IST)
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதாவது நவம்பர் 24ஆம் தேதி வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  
 
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு அதாவது நவம்பர் 24 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
ஏற்கனவே கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்ததால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வரும் நிலையில் மேலும் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 - 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது? அட்டவணை வெளியீடு