Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓ.பி.எஸ். மகன்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி

Webdunia
வியாழன், 14 ஜூலை 2022 (18:24 IST)
ஓ.பி.எஸ். மகன்கள் அதிமுகவில் இருந்து நீக்கம்: எடப்பாடி பழனிசாமி அதிரடி
ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தற்போது ஓபிஎஸ் மகன்களும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால், கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறையை குலைக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
நீக்கி வைக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் ஆகிய இருவரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை செல்வராஜ், மருது அழகுராஜ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, சைதை பாபு, வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஒரு சிலரும் இந்த பட்டியலில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

தோண்ட தோண்ட தமிழ் மக்களின் பிணங்கள்! இனப்படுகொலை எச்சங்கள்..? - அதிர்ச்சி அளிக்கும் செம்மணி புதைக்குழி!

விஜய் கட்சியுடன் கூட்டணியா? பிரேமலதா கூறிய பதில்..!

ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்யவில்லை, ஒரு புகைப்படம் கூட அனுப்பவில்லை.. இந்தூர் தம்பதி விவகாரத்தில் திடுக் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments