Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடியின் விருந்தில் கலந்துகொள்ளாத ஒ.பி.எஸ் மகன் ! அமைச்சர் பதவி இல்லையா ?

Webdunia
வியாழன், 30 மே 2019 (18:01 IST)
கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
இந்நிலையில் இன்று மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவையில் யார்? யார் இடம் இடம்பெறுவார்கள் எனபது குறித்த அரசியல் பரபர்ப்புகள் எகிறிக்கொண்டே உள்ளது.
 
இந்நிலையின் இன்று மாலை 7 மணி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் மோடி பாரதப்பிரதமராக பதவியேற்கும் விழா சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.அப்போது அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
 
முன்னதாக தற்பொழுது புதிய அமைச்சர்களாக பதவியேற்கப்போகிற எம்.பிக்களுக்கு டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தேனீர் விருந்து நடைபெற்றது. இதில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். 
ஆனால் தமிழ்நாட்டில் அதிமுக சார்பில் 1 தொகுதியில் மட்டும் (தேனி ) வெற்றிபெற்று தற்போது டெல்லி சென்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும் அத்தொகுதியின் எம்.பியாகப் பொறுப்பேற்கவுள்ள ரவீந்தரநாத் குமார் மோடியில் இல்லத்தில் நடைபெற்ற இவ்விருத்தில் கலந்துகொள்ளவில்லை  குறிப்பிடத்தக்கது.
 
இதனால் அதிமுக தரப்பில் இருந்து ஒரு எம்பியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளா ரவீந்தரநாத் குமார் மத்திய அமைச்சராவர் என்று எதிர்ப்பார்த்திருந்த அதிமுக கட்சியினர் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல் தெரிகிறது. ஆனால் இன்னும் மத்திய அமைச்சர்கள் பற்றிய முறையான தகவல்கள் வெளியாகவில்லை இன்னும் சற்று நேரத்தில் அனைத்து யூகங்களுக்கும் முடிவு தெரிந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments