Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'எடை' யில்லா 'பாடி' க்கு விடை கொடுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது: ஓபிஎஸ் மகன் அறிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (11:37 IST)
கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்.. எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மகன் மற்றும் அதிமுக எம்பி ரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
என் அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இரட்டை இலையை அங்கீகரித்து கிடைத்த ஒரே ஒரு வெற்றி. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி. கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு கொடுத்த வரம். அதை நீக்கவும் ஒதுக்கவும் கோமாளி கூடாரத்திற்கு அதிகாரம் இல்லை 
 
கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகுதூரம். பதவி கொடுத்தவர்களுக்கே பாதகம் விளைவித்த இடையில் வந்த எடை இல்லா பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது 
 
ஒன்றரை கோடி உண்மையான தொண்டர்களே! ஒன்றிணைவோம்! ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்! என்று பதிவு செய்துள்ளார். அவரது இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments