Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'எடை' யில்லா 'பாடி' க்கு விடை கொடுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது: ஓபிஎஸ் மகன் அறிக்கை

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (11:37 IST)
கோமாளி கூடாரத்திற்கு இல்லை அதிகாரம்.. எடப்பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என அதிமுக விலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மகன் மற்றும் அதிமுக எம்பி ரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
என் அங்கீகாரம் நாடாளுமன்றத்தில் இரட்டை இலையை அங்கீகரித்து கிடைத்த ஒரே ஒரு வெற்றி. அது உண்மை தொண்டர்களின் உழைப்பால் கிடைத்த வெற்றி. கழக நிரந்தர பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு கொடுத்த வரம். அதை நீக்கவும் ஒதுக்கவும் கோமாளி கூடாரத்திற்கு அதிகாரம் இல்லை 
 
கொள்ளைப்புற வழி வந்தவர்களுக்கு கொள்கை விலகி சென்றது வெகுதூரம். பதவி கொடுத்தவர்களுக்கே பாதகம் விளைவித்த இடையில் வந்த எடை இல்லா பாடிக்கு விடை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது 
 
ஒன்றரை கோடி உண்மையான தொண்டர்களே! ஒன்றிணைவோம்! ஒற்றுமையோடு வெற்றி பெறுவோம்! என்று பதிவு செய்துள்ளார். அவரது இந்த அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments