Publish Date: Tue, 06 Apr 2021 (17:16 IST)
Updated Date: Tue, 06 Apr 2021 (17:24 IST)
ஓபிஎஸ் மகன் ரவீந்தர் சென்ற கார் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தேனி மாவட்டத்திலுள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் நடைபெற்றுவரும் வாக்குப்பதிவைப் பார்க்கச் சென்ற துணைமுதல்வரின் மகனும் தேனி தொகுதி எம்பியுமான ஓ.பி,.ரவீந்தரநாத்தின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுக மற்றும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து, எம்பி ரவீந்தரநாத் கூறும்போது, திமுகவினர் என் கார் மீது தாக்குதல் நடத்தினர் எனக் குற்றம்சாட்டியுள்ளார்