Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும்: கமல் டுவீட்

Advertiesment
கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும்: கமல் டுவீட்
, செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (13:44 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் இன்று தனது இரண்டு மகள்களுடன் சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனையடுத்து இன்று காலை வாக்குப் பதிவு செய்தவுடன்  தான் போட்டியிடும் கோவை தொகுதிக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
கோவை தெற்கு தொகுதியில் உள்ள பல வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று அவர் வாக்கு பதிவை ஆய்வு செய்தார். மேலும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ’வாக்காளர்களுக்கு பணம் மற்றும் டோக்கன் கொடுப்பது குறித்து ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வேன் என்றும் கூறினார் இதன் பின்னர் அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பதாவது:
 
மக்கள் தீவிரமாக வாக்களித்து வருகிறார்கள் என்பதில் பெருமகிழ்ச்சி. ஜனநாயகக் கடமையை குடும்பத்துடன் நிறைவேற்றிவிட்டு கோவைக்கு வந்துவிட்டேன். கடமையை சரியாக செய்பவர்களுக்கு உரிமைகள் தானே வந்தடையும். செய்யுங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொந்த ஊரில் வாக்களித்த திருமா வளவன்!