Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம்: உத்தரவாதம் கொடுத்த ஓபிஎஸ்..!

அதிமுக கட்சியின் கொடி, சின்னத்தை பயன்படுத்த மாட்டோம்: உத்தரவாதம் கொடுத்த ஓபிஎஸ்..!
, வியாழன், 30 நவம்பர் 2023 (13:40 IST)
அதிமுக பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை  பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.  

அதிமுக கொடி சின்னத்தை பயன்படுத்த கூடாது என ஓபிஎஸ் க்கு சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. உத்தரவை மீறினால் நீதிமன்ற கவனத்திற்கு கொண்டு வரும்படி எடப்பாடி பழனிச்சாமிக்கு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

 இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் ஹெட் ஆகியவற்றை பயன்படுத்த மாட்டோம் என ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.  

இதனை அடுத்து ஓபிஎஸ் எதிராக எடப்பாடி பழனிச்சாமி தொடந்த வழக்கு டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஓபிஎஸ் தரப்பு உத்தரவாதம் கொடுத்துள்ளதால் இனிமேல் அதிமுகவின் கொடி, சின்னத்தை அவர் பயன்படுத்த மாட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் பூரண குணமடைய வேண்டி உசிலம்பட்டி திருமுருகன் கோவிலில் பால் அபிஷேகம்!