Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதற்கு பெயர் தான் "சொல்லாததையும் செய்வோம்" என்பதா!? – ஓபிஎஸ் அறிக்கை

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (12:31 IST)
பொங்கலுக்கு தமிழக அரசு சார்பில் நிதி வழங்காமல் பொங்கல் பை மட்டும் வழங்குவது குறித்து ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் தமிழகத்தில் பொங்கல் கொண்டாடப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பை மற்றும் பணம் வழங்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் வரும் பொங்கலுக்கு வழங்க உள்ள பொங்கல் பையில் உள்ள பொருட்கள் குறித்து தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் பொங்கல் பணம் வழங்காதது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் “"அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன்" என்று கூறி ஆட்சிக்கு வந்த திமுக, ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பொங்கல் நிதி உதவி வழங்குவதை கைவிட்டுவிட்டு, வெறும் பொங்கல் தொகுப்பினை மட்டும் அறிவித்து மக்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதற்கு பெயர் தான் "சொல்லாததையும் செய்வோம்" என்பதா!?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை..! கடன் பிரச்சினையால் விபரீத முடிவு.!!

கனமழையால் தமிழகத்தில் 4,385 ஹெக்டேர் பயிர்கள் சேதம்.!

குற்றால அருவிகளில் குளிக்கலாம்.. மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி..!

எடப்பாடி பழனிசாமி கை நீட்டுபவர் தான் பிரதமராக வருவார்: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

திரௌபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments