Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி பொது தேர்வில் மாற்றம் - தள்ளிப்போக வாய்ப்பு!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (12:18 IST)
பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வுக்களை நடத்துவதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்து வந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் 9 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. சமீப காலமாக மழை, பண்டிகை விடுமுறை என மாணவர்களுக்கு தொடர்ந்து பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை பொதுதேர்வுக்களை நடத்துவதில் சில மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், நடப்பு கல்வியாண்டில் மார்ச்  - ஏப்ரல் மாதங்களுக்கு பதிலாக மே முதல் வாரத்தில் பொதுத்தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டம் என தகவல் தெரிவிக்கின்றன. 
 
இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதும் வெளியாகாத  நிலையில் இந்த திட்டம் இறுதி செய்யப்பட்டதும் அமைச்சர் இது குறித்து அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

ஈரோடு கிழக்கில் நடந்தது தான் விக்கிரவாண்டியில் நடக்கும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

மனித விரலை அடுத்து பூரான்.. ஆன்லைன் ஐஸ்க்ரீம் வாங்குவதற்கு அச்சப்படும் பொதுமக்கள்..!

நீட் தேர்வு முறைகேடு.. 4 மாணவர்கள் கைது.. 9 மாணவர்களுக்கு சம்மன்..!

ஆப்பிள் மேல் அப்கிரேட்… மதுரையில் உலாவரும் வேன்!

அடுத்த கட்டுரையில்
Show comments