Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதருடன் ஓபிஎஸ்-ஈபிஎஸ் இன்று சந்திப்பு: சசிகலா விவகாரம் பேசப்படுகிறதா?

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (07:59 IST)
பிரதமர் மோடியை இன்று டெல்லியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் சந்தித்து பேச உள்ளனர் 
 
இன்றைய சந்திப்பின் போது சசிகலா, அதிமுக பாஜக கூட்டணி மற்றும் மேகதாது விவகாரம் ஆகியவை குறித்து பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நேற்று காலை டெல்லி சென்ற பன்னீர்செல்வம் மற்றும் நேற்று இரவு டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தங்கமணி வேலுமணி ஆகியோர் தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருப்பதாகவும் இவர்கள் இன்று நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பிரதமர் மோடி திடீரென அதிமுக பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமருடனான சந்திப்பு முடிந்த பின்னர் இன்று ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக டெல்லியில் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்று கூறப்படுகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய், புஸ்ஸி ஆனந்த் பதிலளிக்க வேண்டும்: சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு!

அதிமுக நிர்வாகிகள் ஊடகத்திற்கு பேட்டி அளிக்க வேண்டாம்: எடப்பாடி பழனிசாமி

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இன்றும் உயர்வு.. அமெரிக்காவுக்கு நன்றி..!

10 கோவில்களில் கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து.. அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

ஆளுனர் ரவி திடீர் டெல்லி பயணம்.. மசோதா தீர்ப்பு குறித்து அமித்ஷாவுடன் ஆலோசனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments