Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (07:53 IST)
தென்மேற்குபருவ காற்று காரணமாக தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, திண்டுக்கல், தென்காசி மற்றும் தென் மாவட்டங்களில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
அதிகபட்சமாக கோவை மாவட்டம் சூலூரில் 9 சென்டிமீட்டர் மழையும், வால்பாறையில் 6 சென்டி மீட்டர் மழையும் நேற்று பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது மேலும் வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் வரும் 27ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments