Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுக்கு இதைவிட சிறப்பான துவக்கம் இருக்காது! – பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியாவுக்கு இதைவிட சிறப்பான துவக்கம் இருக்காது! – பிரதமர் மோடி பெருமிதம்!
, சனி, 24 ஜூலை 2021 (13:23 IST)
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் மீரா பாய் வெள்ளி பதக்கம் வென்றுள்ளதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில் இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பளுதூக்கும் போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இரண்டாம் இடத்தை அடைந்து வெள்ளி பதக்கத்தை தட்டியுள்ளார்.

இதுகுறித்து வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி “ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு இதை விட சிறந்த தொடக்கம் இருக்க முடியாது. மீராபாய் சானுவின் வெற்றி இந்தியர்களை ஊக்கப்படுத்தும். மீராபாயின் வெற்றி இந்தியாவிற்கு ஒரு பிராகசமான தொடக்கம்” என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு கிண்ணம் நெறைய மாவ எடுத்து…! – ட்ரெண்டாகும் நெருப்பு தோசை வீடியோ!