Publish Date: Mon, 21 Mar 2022 (16:09 IST)
Updated Date: Mon, 21 Mar 2022 (19:12 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பி.எஸ்.யிடம் நாளையும் விசாரணை நடத்தவுள்ளது.இன்று நடைபெற்ற விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் 3.30 மணி நேரம் இன்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். மீண்டும் இந்த விசாரணை நாளையும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.