Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

காலி பிளாஸ்டிக் பாட்டில்களை திருப்பி அளித்தால் ரூ.1 தரப்படும்: நெல்லை மாநகராட்சி அறிவிப்பு..!

plastic
, வெள்ளி, 24 மார்ச் 2023 (08:25 IST)
காலியான பிளாஸ்டிக் பாட்டில்களை திருப்பி அளித்தால் ஒரு ரூபாய் தரப்படும் என நெல்லை மாநகராட்சி மேயர் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து மாநகராட்சியில் அளித்தால் ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வழங்கப்படும் என நெல்லை மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தெரிவித்துள்ளார். சோதனை முயற்சியாக நெல்லை டவுன் பகுதியில் மட்டும் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஒரு சில நாட்களில் இந்த முறை மாவட்டம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
குப்பை தொட்டிகளில் இருக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து கொடுத்தால் ஒரு பாட்டிலுக்கு ஒரு ரூபாய் வழங்கப்படும் என்பதை அடுத்து பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
பிளாஸ்டிக் பாட்டில்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கனவே வட மாநிலங்களில் உள்ள பல பகுதிகளில் இந்த அறிவிப்பு வெளியான வெளியாகி அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோடி, அமித்ஷாவுடன் அண்ணாமலை பேசியது என்ன? பரபரப்பு தகவல்கள்..!