Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெய்வேலி என்.எல்.சி பாய்லர் வெடித்த விபத்து: மேலும் ஒருவர் பலி

Webdunia
புதன், 13 மே 2020 (07:39 IST)
நெய்வேலியில் உள்ள என்எல்சி 2வது அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாய்லர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒப்பந்த தொழிலாளர் பாலமுருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தார். 
 
ஏற்கெனவே இந்த விபத்து காரணமாக 8 பேர்கள் தீக்காயம் அடைந்ததாகவும், 2 நிரந்தர தொழிலாளர் உள்பட 3 பேர் இறந்ததாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது. தற்போது பாவாடை, சர்புதீன், அன்புராஜ், சண்முகம், ஜெய்சங்கர், மணிகண்டன் மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய 7 தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த விபத்து காரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதாகவும், உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் பணமும் தருவதாக என்.எல்.சி நிர்வாகம் உறுதி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments